ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஒட்டிய சில பகுதிகளில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…