மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாகவும், 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு சீனாவில் கனமழை காரணமாக ஏற்ப்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் மாயமாகியுள்ள 18 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை இரவு பெய்த மழையால், கிங்காய் மாகாணத்தில் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவின் பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…