பீகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மொத்த 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேர், போஜ்பூர் மற்றும், சரண் ஆகிய மாவட்டங்களில் 6 பேர், மேற்கு சம்பரான் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் 4 பேர், முசாபர்பூர் மாவட்டத்தில் இருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்க்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சீரற்ற வானிலையின் முன்னெசரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று மாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…