இலங்கையில் போராட்டக்காரர்கள் பெரிதினும், பெரிதாக இருந்த புத்தகங்களை அழித்து விட்டதாக இலங்கை பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை சூறையாடினர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜப்கசே கப்பல் மூலம் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எனக்கு சொந்தமான ஒரே வீடு, இப்போது முற்றிலும் எரிந்து நாசமானது, எனது மிகப்பெரிய செல்வமும் பொக்கிஷமும் எனது நூலகத்தில் இருந்த 2,500 புத்தகங்கள் தான் அவை அழிக்கப்பட்டுவிட்டதாகவும், 200 ஆண்டுகளுக்கு முந்தைய கலை மற்றும் ஓவியங்கள், தீயினால் அழிந்து போன நிலையில், அதில் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேதனை தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…