கேரளாவில் படகு கவிழ்ந்ததில் மாணவர் உள்பட 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.
ஆரன்முலா உத்திரட்டாதி படகுப் போட்டி கேரளாவின் ஆலப்புழா அச்சன்கோவில் ஆற்றில் நடந்தது. இதில் சென்னிதலா பள்ளியோடம் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய ஆதித்தன் மற்றும் சேருகோலைச் சேர்ந்த 35 வயது வினீஷ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதற்கிடையே காணாமல் போயுள்ள மற்ற இருவரை தேடும் பணியில் ஸ்கூபா டைவர்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…