இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர் செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் பலரும் தமிழகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாகனங்கள் செல்வதற்கென்று வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பரமக்குடி செல்வதற்கான வழித்தடத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…