மகாராஷ்டிராவில் காதலனுக்காக 2 பெண்கள் பொது இடத்தில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் பைதான் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் , இரண்டு இளம்பெண்கள் காதலனுக்காக சண்டையிட்டுக்கொண்டனர். இளம்பெண்கள் இருவரும், 17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை பைத்தானில் உள்ள நெரிசலான பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு பெண் சிறுவனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்ததை அறிந்த மற்றோரு பெண்ணும் அந்த இடத்திற்கு வந்தாள். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதற்கிடையில், சண்டையின் போது காதலன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இறுதியில் பெண்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…