ஆயுத பூஜை திருநாளையொட்டி, தொடர் விடுமுறைகள் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை திருவிழா நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டில் செப்டம்பர் 26 ஆம் நாள் முதல் அக்டோபர் 5 ஆம் நாள் வரை கொண்டாடப்பட உள்ளது.
தசரா என அழைக்கப்படும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வு, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன் படி, ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் நாள் மற்றும் சரஸ்வதி பூஜை அக்டோபர் 5 ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது.
மேலும் ஆயுதபூஜையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதற்கு முன்னதாக வரக்கூடிய சனி, ஞாயிறு கிழமைகளிலும் விடுமுறை என்பதால், இடையில் திங்கள்கிழமை மட்டும் பணியாளர்களுக்கு பணி இருப்பதாக உள்ளது. எனவே,அவர்களுக்குத் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…