சென்னை பெருங்குடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர் . அப்போது இரண்டு இளைஞர்களும் விஷவாயு தாக்கி மயங்கியதை அடுத்து, அவரை அப்பகுதியினர் மீட்டனர். அப்போது ஒரு இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்றோருவர் ஆபத்தனா நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலையே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர், இரண்டு பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…