காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வண்டக்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் படி, சந்தேகத்திற்குரிய இடங்களில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைந்து இருந்த தீவிரவாதிகள் காவல்துறையை நோக்கிச் சுடத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து உஷாரான பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை தீவிரவாதிகள் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளில் ஒருவன் கைசர் கோகா என அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மற்றொரு பயங்கரவாதியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 1 பிஸ்டல் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…