பழம்பெரும் இயக்குநர் காலமானதையடுத்து திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரைப்பட இயக்குனர் கே.என்.சசிதரன் கொச்சி அடுத்த எடப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். இதனையடுத்து சசிதரனின் இறுதிச்சடங்கு இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவருக்கு மனைவி வீணா சசிதரன் மற்றும் ரித்து சசிதரன் மற்றும் முகில் சசிதரன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
1984 ஆம் ஆண்டு வெளியான 'அக்கரே' திரைப்படத்தின் மூலம் மோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இவர், பாரத் கோபி, மாதவி, மம்முட்டி, நெடுமுடி வேணு, மோகன்லால், ராணி பத்மினி, ஸ்ரீனிவாசன் மற்றும் வி.கே.ஸ்ரீராமன் ஆகிய முன்னனி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…