தமிழகத்தில் நாமக்கல், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அடுத்த ஒருமணி நேரம் முதல் மூன்று மணி நேரத்திற்குள் பெய்யும் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…