அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 மாவட்டங்களில் சுமார் 7.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மத்திய அசாமின் நாகோன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 74,705 பேர் 234 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் வெள்லம் வடிந்தவுடன் பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…