Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்பி மோகம்...25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி...!

Bala July 18, 2022 & 11:11 [IST]
செல்பி மோகம்...25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி...!Representative Image.

மதுரையில் பிளஸ்2 மாணவன் ரயில் வழித்தடத்தில் உள்ள 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை கூடல்புதூர் முல்லை நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் விக்னேஷ்வர் என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ்வர் நேற்றைய தினம் நண்பர்களுடன் அதேபகுதியில் உள்ள குட்ஷெட் பகுதிக்குச் சென்றுள்ளார்.  ரயில் பராமரிப்பு பணிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மீது ஏறி செல்பி எடுத்து விளையாடி வந்துள்ளார். அப்போது ரயிலின் மேற்கூரை மீது ஏறிய போது மேலே சென்று கொண்டிருந்த 25 ஆயிரம் வோல்ட் மின்கம்பத்தின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவரை மீட்ட அவரது நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாகப் பலியானர்.

இதுதொடர்பாக பேசிய மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர், மதுரை கோட்டத்தில் உள்ள பெரும்பாலான ரயில் வழித்தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான எச்சரிக்கை பலகைகள் முக்கியமான மற்றும் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வீட்டில் பாயும் 230 வோல்ட் மின்சாரம் பாய்ந்தாலே நாம் தாங்குவதில், இதில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் என்றால் நினைத்துப் பாருங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்