92 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்னப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் TNPSC தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…