தேனி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி மாலை தேனி மாவட்டம் குமுளியிலிருந்து மதுரையை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டையிலிருந்து விசைத்தறி தொடர்பான பொருட்களை ஏற்றிக்கொண்டு எதிரே சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஆண்டிப்பட்டி அருகே ஒரு வளைவில் சரக்கு வாகனம் சாலையை கடந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வநத அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சரக்கு வாகனத்தில் வந்த இருவர் மற்றும் பேருந்து பயணிகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…