ரஷ்யாவுடனான தானிய ஒப்பந்ததின் கீழ் 3 தானிய கப்பல்கள் உக்ரைன் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து தானிய கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இதனால் உலகளவில் உனவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா கவலை தெரிவித்தது. இதனைதொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே தானியம் ஏற்றி செல்லும் கப்பலை ரஷ்யா படைகள் தாக்கக்கூடாது என ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தையடுத்து உக்ரைனில் இருந்து, 58,000 டன் சோளத்துடன் மூன்று கப்பல்கள் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் துருக்கிக்கு செல்வதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் புறப்பட்ட முதல் உக்ரேனிய கப்பல் புதன்கிழமை இஸ்தான்புல்லில் ஆய்வு செய்து லெபனானுக்கு புறப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…