சிவகங்கை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை அடுத்த முகவூரை சேர்ந்த அய்யனார் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அய்யனார் தனது மகன்களான அஜித் மற்றும் சுகந்திரபாண்டியன் உடன் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அய்யானர் மற்றும் அவரது மகன்கள் அஜித், சுந்தரபாண்டியன் ஆகியோரும் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூராவுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…