Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஞ்சா விற்ற பாம்பு நகராஜ், பவுடர் ரவி:- நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

Bala July 05, 2022 & 15:12 [IST]
கஞ்சா விற்ற பாம்பு நகராஜ், பவுடர் ரவி:- நீதிபதி அதிரடி தீர்ப்பு..!Representative Image.

ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக  பவுடர் ரவி, சின்னதுரை, பாம்பு நகராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 3 பேருக்கும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  நீதிபதி திருமகள் உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்