உளுந்தூர் பேட்டையில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த பலி புதுக்காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 70க்கும் மேற்ப்பட்ட மாணவர்கல் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவியிலியர்கள் சத்து மாத்திரைகள் வழங்கியுள்ளனர். இதனை, உட்கொண்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
உடனடியாக பெற்றோர்கள் பிள்ளைகளை அருகில் உள்ள மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே மருத்துவர்கள் மற்றும் சுகாதார குழுவினர் இந்த சத்து மாத்திரையால் ஏதும் அசம்பாவிதம் நிகழாது. பயப்பட தேவையில்லை என கூறி போதிய சிகிச்சை அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…