ஆந்திரா அருகே மேய்ச்சலுக்கு சென்ற 3000 வாத்துக்கள் ஏரியில் விஷம் கலந்த குடிநீரை குடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்த முனிராஜா என்பவர் சுமார் 3 அயிரம் வாத்துக்கள் வளர்ந்து வந்துள்ளார். இவர் வழக்கமாக நேற்று வாத்துக்களை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குடித்த வாத்துக்கள் திடீரென மயங்கி விழுந்து பலியானதை கண்டு அவர் அதிர்சியடைந்தார். வாத்துக்கள் பலியானதால் கதறி அழுத முனிராஜா.
போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். அதில், ஏரியில் மீன்பிடிப்பதற்காக தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிய நபர்கள், பின்னர் விஷத்தை கலந்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…