தெலங்கானவில் பள்ளி உணவை உட்கொண்ட 38 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மஹபூபாபாத்தில் உள்ள பழங்குடியினர் நல குருகுலப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட சுமார் 38 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிகப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துமவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான முதற்கட்ட விசாரணையில், உணவில் மண்புழு, பூச்சிகள் இருந்தது தான் காரணம் என்றும், இது தொடர்பால பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…