முறைத்து பார்த்தாக கூறி அப்பாவி பெண்ணை 4 புள்ளிங்கோ பெண்கள் கொடூராமாக தாக்கும் காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் முறைத்து பார்த்ததாக கூறி டோமினோ நிறுவனத்தின் பெண் ஊழியரை நான்கு பெண்கள் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.வலியால் கதறி அழுதபோதும் அந்த பெண்னை சக பெண்கள் கொடூரமாக தக்கும் காட்சி நெஞ்சை பதறவைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் தாக்கிய 4 பெண்கள் மீது அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் பலர் கூடியிருந்த போதிலும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த பெண்ணை காப்பற்ற யாரும் முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் போலீசில் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவிப்பதாக கூற, அதற்கு 4 புள்ளிங்கோ பெண்கள் "போய் புகார் செய் என்று திமிறாக பதிலளித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…