கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்துள்ள ஆக்சன் த்ரில்லரான விக்ரம் படம் தற்போது திரையரங்குகளில் 100 நாள் ஓடி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 3 ஆம் தேதி பல மொழிகளில் வெளியானது. ஜூலை 8 முதல் ஓடிடியில் வெளியான போதிலும், தொடர்ந்து தியேட்டர்களுக்கு கூட்டத்தை ஈர்த்து வரும் இந்த படம், ஏற்கனவே உலகளவில் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இருந்து 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
100 நாட்களை கடந்து படம் ஓடும் நிலையில், கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்காக சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ட்விட்டரில் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "வணக்கம், ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் ஒவ்வொருவரையும் மானசீகமாக கட்டித் தழுவுகிறேன். விக்ரம் வெற்றிக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தம்பி லோகேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…