டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உக்ரைனில் ரஷ்யா ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களமிறங்கியுள்ள நிலையில் போரை தூண்டும் வகையில் உக்ரைனுக்கு பல்வேறு நவீன் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர வீச்சு கொண்ட ஏவுகணைகளை வைத்து ரஷ்யாவிற்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷ்யாவின் கோபத்தை அதிகப்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய நடத்திய ஷெல் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து Kyrylenko மாகாணத்தின் 3,50,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. டொனெட்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்றுவது உயிர்களைக் காப்பாற்றவும், ரஷ்ய முன்னேற்றத்திலிருந்து நகரங்களை பாதுகாக்க உக்ரேனிய இராணுவத்தை சிறப்பாக செயல்படுத்தவும் அவசியம் என்று உக்ரைன் கூறி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…