வேலி தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கத்தியால் குத்திய சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் ஊராட்சிக்குட்பட்ட தாழ்பாள் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் குமார் என்பவர்கள் பக்கத்து வீட்டில் வசித்து வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே வேலி தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சர்வேயர் வரவழைக்கப்பட்டு வேலி இருக்கும் இடம் அளக்கப்பட்டது. அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் முற்றிய நிலையில், குமார் மற்றும் அவரது சகோதரர் அன்பழகன் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, வீரபாண்டியனின் சகோதரர் சுரேஷ்குமார், மகன்கள் மணிகண்டன், மகேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரை கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மணிகண்டன் என்பவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குடவாசல் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வேலித் தகராறுக்காக கத்திக்குத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…