அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், நடத்துநர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு தொடர்பான 90 சதவிகித பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக சிஐடியூ செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…