Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்சார ரயிலில் பெண் போலீசுக்கு கத்திக்குத்து...!

Bala August 24, 2022 & 15:48 [IST]
 மின்சார ரயிலில் பெண் போலீசுக்கு கத்திக்குத்து...!Representative Image.


சென்னை மின்சார ரயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை கத்தியால் குத்தி தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ் ஆசிர்வா என்பவர், நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏற முயன்ற நிலையில், அவரை ஆசிர்வா கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண் போலீசை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து உடன் பயணம் செய்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிர்வாவை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய நபரை எழும்பூர் ரயில்வே போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்