கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள்; நள்ளிரவு 12:30 மணி முதல் 1 மணிக்குள் பஸ் டிரைவர் டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது, கோலாப்பூர் அருகே லாரி மீது மோதியதாக தெரிவித்துள்ளார். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…