ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பிஞ்சமுறு உயர்நிலை பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த ஷேக் சுஜிதா என்ற மாணவி, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக்கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாணவியை தூக்கி கொண்டு ஓடினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்த விசாரணையில் மாணவி மாரடைப்பு வந்து இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த துயர செய்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு என்பது ஒரு பொதுவான இருதய நோய். இருப்பினும் இந்த காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து மக்களையும் பாதித்து வருகிறது. இது உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…