சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாலும் தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியை தொடர்ந்து பிற காய்கறி விலைகளும் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ப.சிதம்பரம் டுவிட்:-
இதனைதொடர்ந்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நடுத்தரக் குடும்பம் விலை ஏற்றத்தால் படும் பாட்டைக் கணவன்-மனைவியின் சொற்களில் கேளுங்கள். பழம், காய்கறி, பால் வாங்குவதை குறைத்துவிட்டோம். இன்று என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது. ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலை இப்படி எனில் ஏழைக் குடும்பத்தின் நிலை? சிந்தியுங்கள் என டுவிட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…