Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 ரூபாய் “ரோஸ் மில்க்” குடித்ததால் நடந்த விபரீதம்…! மயங்கி விழுந்த சிறுவன் பலி….!

Gowthami Subramani May 29, 2022 & 20:05 [IST]
10 ரூபாய் “ரோஸ் மில்க்” குடித்ததால் நடந்த விபரீதம்…! மயங்கி விழுந்த சிறுவன் பலி….!Representative Image.

சென்னையில் வெப்பம் அதிகமாக இருந்ததால், மளிகை கடையில் ரோஸ் மில்க் வாங்கிக் குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கண்ணகி நகரான ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தான் மணிகண்டன். இவருடைய மனைவி பெயர் திவ்யா. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இவர்களது இரண்டாவது மகன் 11 வயதான வசந்த குமார் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறார்.

நேற்று இரவு, சிறுவன் வசந்த குமார் பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளான். விளையாட்டை முடித்து விட்டு பூங்காவிற்கு அருகே உள்ள கடையில் ரோஸ் மில்க் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது சென்னையில் ரோஸ் மில்க் குடித்த மாணவர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்