நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை சாதுரியமாக செயல்பட்டு போராடி இளைஞர்கள் மீட்டெடுத்துள்ளனர்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறவனம் இரண்டாம் சுரங்க அருகில் ஊமங்கலம் ஊரைச் சார்ந்த 5 வயது சிறுவன் நிலக்கரி வெட்டி எடுத்து மேல் புறம் கொட்ட பட்ட மண்ணில் ஈரப்பதம் இருப்பதை உணராத சிறுவன் நடந்து சென்ற போது சிறுவனை நெஞ்சலவிற்கு உள் வாங்கியது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அந்த பகுதியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில் சிறுவன் கத்தி கதறி கூச்சலிட்டு சோர்வடைந்து போனான். பிறகு,
ஆபத்தில் சிக்கிய சிறுவன் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வேலை பார்த்து விட்டு வந்த நெய்வேலி ரோமாபுரியை சார்ந்த இளைஞர்கள் புதை குழிக்குள் சிக்கிய அச்சிறுவனை கண்டு சிறிது நேர போராட்டத்தின் பின் பத்திரமாக மீட்டு அவனுக்கு முதல் உதவி செய்து அவனை அவனது வீடு எங்கு என்று விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ரோமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பிரவின் குமார், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…