Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புது மாப்பிள்ளை சாலையோரம் மரணம்...! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...

Gowthami Subramani September 09, 2022 & 17:50 [IST]
புது மாப்பிள்ளை சாலையோரம் மரணம்...! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...Representative Image.

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் புது மாப்பிள்ளை ஒருவர் சாலையோரமாக சடலமாகக் கிடந்தார். இதில் சந்தேகம் தெரிவித்து, இளைஞரின் உறவினர்கள் காவல் துறையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஜெகதீஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஜெகதீஷ் சென்ற இரு சக்கர வாகனத்திற்குச் சேதம் ஏதும் இல்லை. இதனால், ஜெகதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரளித்ததுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில், புது மாப்பிள்ளையான ஜெகதீஷ் மரணமடைந்தது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி போலீஸார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்