கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தொடர்பாக அவருடன் படித்து வந்த 2 மாணவிகள் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர்களான குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாணவியின் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், மாணவி ஸ்ரீமதியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் கடந்த ஒன்றாம் தேதி ஒப்படைத்தனர். ஆய்வை முடித்து அதன் அறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிகளின் மாணவி ஸ்ரீமதியுடன் படித்து வந்த இரண்டு மாணவிகள் தாமாக முன் வந்து விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போது நீதிமன்ற அறைக் கதவுகள் மூடப்பட்டு 2 மணி நேரம் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்து கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…