இன்று முதல் ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. விலை உயர்வின் படி, 500 கிராம் ஆவின் தயிர் ரூபாய்.35க்கும், 500 கிராம் ஆவின் நெய் ரூபாய் 290க்கு விற்பனை செய்யப்படும் என்றும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமல் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும்,
ஒரு லிட்டர் நெய்-க்கு ரூ.50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஒரு லிட்டர் நெய்-ன் விலை ரூ.538ல் இருந்து ரூ.588ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தயிர், நெய் ஆகிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் அழுத்ததால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…