திருச்செந்தூர் பகுதியில் வாடிக்கையாளர் போல் வந்து தங்க நகையை திருடி அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்து சென்ற திமுக வார்டு செயலாளரின் செயல் தற்போது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் நகை வாங்க வந்துள்ளார். அப்போது கடையில் வேலையாட்கள் நகையை எடுத்து காண்பிக்கும் போது, ஒரு நகையை மட்டும் வைத்து விட்ட மற்ற டிட்சைனகளை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதை நம்பி அந்த டிசனை மட்டும் வைத்து விட்டு மற்ற நகைகளை எடுக்கும் போது, வாடிக்கையாளர் போல் வந்த அவர் தன் கையில் வைத்திருந்த கவரிங் நகையை வைத்து விட்டு அதில் இருந்த தங்க நகையை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டுள்ளார். இது குறித்து சிசிடிவி காட்சிகள் கடை உரிமையாளரின் கவனத்திற்கு வந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் , திருட்டில் ஈடுபட்டது, அரமங்கலம் 8வது திமுக செயலாளர் என தெரியவந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…