ஜிம்பாவே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோயால் 156 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாவே நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தட்டம்மை நோய் வேகமெடுத்து வந்துள்ளது. இந்நிலையில் தட்டைம்மை நோயால் ஜிம்பாவே நாட்டில் இதுவரை 156 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டாயிரத்து முப்பத்து ஐம்பத்து ஆறு பேர் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாகப் பலர் தங்களது குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர் .
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…