சேலம் அடுத்த எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 30க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் கிளம்பியுள்ளது. அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று, எதிர்பாரதவிதமாக நேருக்கு மோதியது. இதில் தனியார் பேருந்து புளியமரத்தில் மோதி நின்ற நிலையில், டிரைவர் இன்ஜின் மீது தூக்கி விசப்பட்டார்.இந்த விபத்தில் காயமடைந்த பயனிகள் சேலம், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…