சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதையொட்டி சென்னை விமான நிலையில்த்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, போட்டிகளில் பங்கேற்க வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியுரிமை, சுங்கசோதனை உள்ளிட்ட பிரிவுகளில் தனியாக சிறப்பு கவுன்ட்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனர்.
மேலும் போட்டிகளை காணவும் ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…