சென்னையில் கலைஞர் பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சி இன்றோடு நிறைவு பெறுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த காண்காட்சி 3 நாட்களுக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதற்கிடையே, இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…