அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையின் கடும் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் நினைவிடத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரு நினைவிடங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெயலலிதா நினைவிடத்தில் தீக்குளிக்க முயன்ற நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
மேலும் தென்சென்னை தெற்குகிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் மற்றும் மைத்ரேயன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஈபிஎஸ்-ஐ சந்தித்துள்ளனர். இதன் மூலம் ஓபிஎஸ் பலம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…