அதிமுகவை யார் நினைத்தாலும் அளிக்க முடியாது நான் முன் நின்று காப்பேன் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிரிந்திருந்த இரண்டு அணிகள் பெயரளவில் இணைந்ததே தவிர மனதளவில் இன்னும் இணையவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ள ஒற்றை தலைமை பிரச்னை மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. யார் அதிமுகவை வழிநடத்தவேண்டும் என ஓபிஎஸ் அணியும் இபிஸ் அணியும் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர்.
இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் என்ன என கண்டுபிடித்துவிட்டு பொதுக்குழுவை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி பொதுக்குழு நாளை (ஜூன் 23) அன்று நடைபெறும் என கூறியுள்ளது. ஓபிஎஸ் நிச்சயம் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை இறுதி செய்யும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனால் இதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “ அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன் என கூறியுள்ளார்.
அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் அதனை அனுமதிக்க கூடாது, அதற்கு ஐடி விங்ன் பங்கு மிகவும் முக்கியம் நீங்கள் துணை நிற்க வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…