ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அகழாய்வு பணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி அண்மையில், கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…