அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்றும், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபுமுருகவேல், இரு தலைவர்களும் சமமான அதிகாரம் பெற்றிருந்தாலும் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பிரிவு தமிழக டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…