Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவையை டிக் செய்த ஓபிஎஸ் :- எஸ்.பி.வேலுமணி கோட்டையில் பறக்க போகும் ஓபிஎஸ் கொடி...!

Bala August 04, 2022 & 17:22 [IST]
கோவையை டிக் செய்த ஓபிஎஸ் :- எஸ்.பி.வேலுமணி கோட்டையில் பறக்க போகும் ஓபிஎஸ் கொடி...!Representative Image.

கோவையில் வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஓ. பன்னீர் செல்வம் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில்  இந்தாண்டு பொதுக்கூட்டத்தை கோவையில் நடத்த ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆதரவாளர்களை பெருமளவில் திரட்டி மாஸ் காட்டப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வும் மான கோவை செல்வராஜ் செய்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. 

எடப்பாடி பழனிசாமியின் தளபதியாக எஸ்.பி வேலுமணி வலம் வருவதாலும், கோவையில் அசைக்க முடியாத செல்வாக்கை கொண்டுள்ளதாலும், ஆளும் திமுக தரப்பு  அவரை சாய்க்க சமயம் பார்த்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் நடக்கப்போகும் ஓபிஎஸ் தரப்புக்கு எளிதாக  அனுமதி கிடைத்து விடும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தான் இருக்கிறார். அங்கிருக்கும் தனது பண்ணை வீட்டிலிருந்தபடியே தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்