அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்ப்பட்ட மோதல் காரணமாக தொண்டர்கள் காயமடைந்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், பெரம்பூர் அதிமுக நிர்வாகி மாரிமுத்து ரத்தக்கறையுடன் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு என்னை தாக்கினர்” என கூறினார்.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், 'அவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்தால் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…