ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்ல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பென்னகரம் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் கல்லூரி மாணவி சடலமாக கிடப்பதாக அப்ப்பகுதி மீனவர்கள் காவல்துறைஇயினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில் காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த பெண் தருமபுரி மாவட்டம் நெல்லை நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் என்பதும் அவர் தருமபுரி அரசூ கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படித்து வந்ததும் தெரியவந்தது. இவர் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…