EPS Vs OPS:-அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதியாகிவிட்டதாகவும், தற்போது ஓபிஎஸ் பொருளாளார், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் மட்டுமே நீடிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய கேள்வி எடப்பாடி பழனிசாமியை அணியை அதிர்சியடைய வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வரும் 11ம் தேதி கூடும் என்று, நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். இதற்கு ஓபிஎஸ் டீம் இது சட்ட விரோதம் என்றும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு அவர்கள்தான் பொதுக்குழுவை அறிவிக்க வேண்டும். அப்படி இருக்கும் போது ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல், அதுவும் அவைத்தலைவர் எப்படி அடுத்த பொதுக்குழுவை அறிவிக்க முடியும் என கேள்வி எழுபினார்.
இதற்கு பதிலடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி அணியை சேர்ந்த சிவி சண்முகம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றே காலாவதியாவிட்டதாகவும், தற்போது அந்த பதவி காலியாகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுக்குழுவை கூட்டி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித விதி மீறலும் இல்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக டுவிட் செய்துள்ள அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது என்றால், அவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எப்படி செல்லும் ?அவர்களால் அறிவிக்கப்பட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, நகர ஒன்றிய, கழக நிர்வாகிகள் எப்படி செல்லும்? என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…