Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கட்சியை உடைக்க விரும்புகிறாரார்கள்.. தொண்டர்கள் மத்தியில் மனம் வெதும்பிய தலைவர்!!

Sekar June 24, 2022 & 18:55 [IST]
கட்சியை உடைக்க விரும்புகிறாரார்கள்.. தொண்டர்கள் மத்தியில் மனம் வெதும்பிய தலைவர்!!Representative Image.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கட்சி தொண்டர்களிடம் பேசுகையில், கிளர்ச்சி எம்எல்ஏக்கள் கட்சியை உடைக்க விரும்புகிறார்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தனது பக்கம் 38 சிவசேனா எம்எல்ஏக்களுடன் வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறார் என முதல்வர் தாக்கரேயிடமிருந்து கருத்துக்கள் வந்துள்ளன.

"கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சியை உடைக்க விரும்புகிறார்கள். நான் முதல்வர் ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. வர்ஷா பங்களாவை விட்டு வெளியேறினேன், ஆனால் சண்டையிட விருப்பம் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

"எனக்கும் அதிகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் முன்பே கூறியுள்ளேன். சிவசேனாவை விட்டு வெளியேறுவதை விட சாவதே மேல் என்று கூறியவர்கள் இன்று ஓடிவிட்டனர்" என்று கட்சியின் மாவட்ட பிரிவு தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அவர் பேசினார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், அவர் கொரோனா தொற்றுநோய் மற்றும் அவரது சொந்த உடல்நலக்குறைவு ஆகியவற்றுடன் போராடினாலும் அரசை சிறப்பாக வழிநடாத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் எதிரிகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டனர் என்று தாக்கரே மேலும் கூறினார்.

முதல்வரின் உரையின் போது சிவசேனா பவனில் சிவசேனா இளம் தலைவரும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே உடனிருந்தார். ஷிண்டேவின் கிளர்ச்சியை அடுத்து, முதல்வர் தாக்கரே புதன்கிழமை இரவு தெற்கு மும்பையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டு புறநகர் பாந்த்ராவில் உள்ள குடும்ப வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்